උණුසුම් පුවත්

கொரோனா மரண ஆர்ப்பாட்டம், உபதேசத்திற்கும் வழக்கு,  பிக்குகளின் போராட்டம் யாரின் தேவைக்காக?

Spread the love

இன்று நடிப்பவர்கள் அனைவரையும் ஆட்டிவைப்பது அரசாங்கமே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் பரிதவித்துப் போயுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ இந்த அளவு கொள்ளைக்காரராக இருப்பார் என்பதை ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள். நினைத்திருந்தால் இதனை செய்திருக்க மாட்டார்கள். கோட்டாபயவை தெரிவு செய்தவர்களுக்கு தங்களது செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது. அரச சொத்துக்களை விற்பதற்கோ கொமிசன் பெறுவதற்கோ முடியாவிட்டால் அதற்கு தேவையான சுற்றுச்சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்கு உணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை களத்திற்கு கொண்டு வரவேண்டும். அந்த ஒப்பந்தம் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களிடமே ஒப்படைக்கப்படும். வீதியில் இறங்கி voice cut வழங்கக்கூடிய பிக்குகள் மூலம் முஸ்லிம் சடலங்கள் புதைப்பு விடயத்திற்கு எதிராக போராட்டம் செய்துள்ளனர். மாகாண சபை வேண்டாம் என இன்னுமொரு போராட்டம் நடக்கும். அதேபோன்று கால்டன் வீட்டில் நடைபெற்ற பன நிகழ்விற்கு எதிராக வழக்கு. இந்த அனைத்து விடயங்களுக்கும் தலைமை வகிப்பது ராஜபக்ஷ நிக்காயவின் ஆதரவு பிக்குகள் என்பது விசேட அம்சமாகும். எனவே இந்த போராட்டங்கள் நாட்டு மக்கள் மீதுள்ள அன்பினால் அக்கறையால் அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுடன் மாறாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதா வீழ்ச்சி, சமூக சீரழிவு என்பவற்றை மூடிமறைத்து நாட்டு மக்களின் கவனங்களை திசை திருப்பும் நோக்கிலான நாடகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  இன்று போராட்டம் நடத்தும் அனைவருக்கும் உண்மையான பற்று இருந்தால் பி.பி.ஜயசுந்தரவிற்கு பதவி கொடுக்கும் போது அல்லது அமைச்சரவை நியமனம் வழங்கும் போது போராட்டத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். எனவே அரசாங்கத்தின் நாடகக் கூத்துக்கு கவனம் செலுத்தாமல் நாட்டின் பொருளாதார அழிவு, சமூக சீரழிவு, நாட்டு சொத்துக்களை விற்கும் பேரவலம் குறித்து நாட்டு மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இந்த நாடகத்தின் ஊடாக சடலங்கள் விடயத்தில் சிங்கள – முஸ்லிம் கலவரத்தையும் மாகாண சபை புறக்கணிப்பு ஊடாக சிங்கள-தமிழ் கலவரத்தையும் ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளனர். அத்துடன் அலி சப்ரியின் வருகையுடன் முஸ்லிம் அடிப்படைவாதம் சற்று தணிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வேறு வடிவில் ஏற்படுத்தும் வழிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டும் செயற்படுகின்றனர். மக்களின் சடலங்கள் மீது ஏறி முன்னேற நினைக்கும் ராஜபக்ஷக்களின் சடலங்களை மக்கள் இறுதியில் தூக்கி எறிவர்.
லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச

Spread the love

Leave a Comment

You may also like