උණුසුම් පුවත්

நாட்டு பணத்தை நாடு முழுக்க சுற்றுலா சென்று வீணடிக்கும் சரத்தும் பீரிஸும்….! 

රයිගමයයි - ගම්පලයයි
Spread the love

 சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் வாரத்தில் மூன்று நாட்கள் சதோச நிறுவனத்திலும் மேலதிக நாட்கள் சிவில் பாதுகாப்பு படைகளை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டு சரத் வீரசேகரவுடன் நாடு முழுவதும் சுற்றித் திரிகிறார். அதற்கு சிறந்த உதாரணம் கடந்த வாரம் இருவரும் மேற்கொண்ட அம்பாறை விஜயமாகும். ராஜபக்ஷக்களின் வீடுகளுக்கு அரிசி, மரக்கறி வகைகள் தேர்தல் காலத்திலும் தற்போதும் வந்துசேர்வது அம்பாறையில் இருந்து என்பதால் கட்டாயம் அங்கு விஜயம் செய்யத்தான் வேண்டும். இந்த விஜயத்திற்காக சதோச நிறுவனம் சார்பில் எரிபொருள் பயன்படுத்தப்படுவதுடன் சிவில் பாதுகாப்பு படை பிரதி பணிப்பாளர் சேரசிங்கவும் தனது குடும்ப சகிதம் விஜயத்தில் கலந்து கொள்கிறார். சேரசிங்க தனது மனைவி ,பிள்ளைகள் மற்றும் பெற்றோருடன் 02/01/2020 அன்று அநுராதபுரம் சென்று கும்மாளமடித்தது யாருடைய பணத்தில்? சிவில் பாதுகாப்பு படையினர் வெயில் மழை பாராது உயிரையும் துச்சமாக நினைத்து கஸ்டப்படுவது இந்த குடும்பத்தை வளர்ப்பதற்கா? அடுத்த தேர்தலில் போட்டியிடும் நோக்கில் ஆனந்த பீரிஸ் இவ்வாறு நடந்து கொள்கிறார். விஜயராம வீட்டில் அண்மையில் இடம்பெற்ற விருந்து ஒன்றில் அவர் இதனை பகிரங்கமாக கூறியுள்ளார். சரத் வீரசேகரவை கூட அழைத்துச் சென்று அவரது ஆதரவாளர்களையும் கவர முயற்சிக்கிறார். நாடு முழுவதும் உள்ள 22 சிவில் பாதுகாப்பு படை அலுவலகங்களுக்கு செல்ல அவர் தீர்மானித்துள்ளார். இதற்கான எரிபொருள் மற்றும் உணவு செலவுகள் அவரது வீட்டில் இருந்து கிடைக்குமா? இந்த வாரம் கந்தளாய் மற்றும் திருகோணமலைக்கு செல்லவுள்ளார். கந்தளாய் அரிசி கொள்ளையர்களுக்கு நன்றி கூறுக்கூடும். நாட்டுக்கு வந்துள்ள நிலையில்! இராணுவ ஆட்சி ரொம்ப சிறப்பு “சார்”.
 லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
   
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச[wpedon id=”7467″]

Spread the love

Leave a Comment

You may also like