Uncategorized @ta

ராஜபக்ஷக்கள்.. யுக்ரேன் நாட்டவர்களை அழைத்து வந்து கொரோனா தொற்றை நாட்டில் பரப்பிவிடுவது தடுப்பூசி விற்பனை செய்துகொள்ளவா என்று சந்தேகம்..?

Spread the love

கோட்டாபய ராஜபக்ஷவின் மச்சான் முறையான மிக் விமான கொடுக்கல் வாங்கல் மோசடியில் பிரதான சந்தேகநபராக குற்றப்பத்திரிகை பெற்றுள்ள உதயங்க வீரதுங்கவின் ஏற்பாட்டில் அரச செலவில் அழைத்து வரப்பட்டுள்ள 647 யுக்ரேன் நாட்டு பிரஜைகள் தற்போது திஸ்ஸமகாராம மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர். இந்த சுற்றுலா குழுவில் கொரோனா தொற்று corona positive என அடையாளம் காணப்பட்ட நபர்களும் இருப்பதாகவும் இவர்கள் முகக்கவசம் அணியாது சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்காது சுற்றுலா சென்று நாட்டு மக்களை ஆபத்தில் தள்ளியுள்ளனர். இவர்கள் இலங்கைக்கு வந்து மூன்றாவது நாளில் கொரோனா positive என PCR பரிசோதனையில் வௌியானது. தற்போது ஹம்பாந்தோட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள இவர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் நாடு முழுவதும் சுற்றுலா மேற்கொண்டு கொரோனாவை பரப்பி வருகின்றனர். அரசாங்கத்தின் கொரோனா பாதுகாப்பு வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக மீறி இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். இலங்கைக்குள் இலங்கை பிரஜைகளுக்கு ஒரு சட்டம் யுக்ரேன் பிரஜைகளுக்கு ஒரு சட்டம் என்பதை கோட்டாபய ராஜபக்ஷ தற்போது நிரூபித்துக் காட்டியுள்ளார். இவர்கள் கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், தம்புள்ளை, குருநாகல், திஸ்ஸமகாராம போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல இருப்பதாக தெரிய வருகிறது. யுக்ரேன் நாட்டவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியை இலங்கை மக்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் இதில் இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அதனால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள யுக்ரேன் நாட்டவர்களை நாடு முழுவதும் அனுப்பி நாட்டு மக்களுக்கு கொரோனா தொற்றை ஏற்படுத்தி பின்னர் அவர்களுக்கு தடுப்பூசியை விற்பனை செய்யும் செயலில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றதா என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம் முகக்கவசம் அணியாது பாதுகாப்பின்றி கூட்டம் கூட்டமாக இவர்கள் நாடு முழுவதும் சுற்றித் திரிகின்றனர். இதன்மூலம் நாட்டு பிரஜைகளுக்கு ஒரு நீதி, வௌிநாட்டு பிரஜைகளுக்கு ஒரு நீதி என்ற கோட்டாபயவின் ஆட்சி புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளதென மக்கள் தெரிவிக்கின்றனர். ராஜபக்ஷக்களும் மலேசிய பிரஜைகள் என்பது தற்போது தௌிவாகப் புரிகிறது.
 லங்கா தவச செய்தி இணையத்தின் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சைபர் தாக்குதலை தடுப்பதற்கு security net ஒன்று தயாரிக்கும் தேவைக்காக உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கீழுள்ள  Paypal தொடர்பை அழுத்தி உங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.
   
நன்றி.
பிரதம ஆசிரியர் – லங்கா தவச

Spread the love

Leave a Comment

You may also like